Welcome To Our School Blog Site!

Wednesday, January 22, 2014

எமது பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்:

             இறம்புக்கனை தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக பத்தம்பிடிய உடுஹுருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் ஜாஹிர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

       ஜானாப் ஜாஹிர் அவர்கள் சில வருடங்களுக்கு முன் எமது இப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமை ஆற்றியவர் என்பதுடன், கல்வியில் கீழ் நிலையில் இருந்த பத்தம்பிடிய உடுஹுருவ முஸ்லிம் வித்தியாலயத்தை மாவனல்லை வலயத்தின் இரண்டாம் இடத்துக்கு கொண்டுவந்த பெருமை அவரை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தகைய ஒருவரை அதிபராகப் பெற்றது ஊரினதும் மாணவர்களினதும் பொரும் பாக்கியமாகும். இத்தைகைய ஒருவரை பயன்படுத்தி எமது பாடசாலையையும் முன்னிலைக்கு கொண்டுவர பெற்றார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். வஸ்ஸலாம்.

Tuesday, October 2, 2012

எமது வரலாற்று சாதனை




               ரம்புக்கனை ஹுரீமலுவையில் அமைந்துள்ள தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 7 மாணவ மாணவிகள் சித்தி எய்தியுள்ளனர். அத்துடம் மாணவன் முஹம்மத் அஷ்பாக் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 9 இடத்தை பெற்றுள்ளதுடன் பாடசாலையின் 86 வருட வரலாற்றில் புலமை பரிசில் பரீட்சை ஒன்றில் பெற்ற ஆகக் கூடிய புள்ளியுமாகும்.

         இது தவிரவும் பாதிமா யும்னா 171 புள்ளிகளை பெற்றுள்ளார். இவர்களுடன் சகோ. சிராஜின் மகன் இன்ஸாப், சகோ. ரிசாட்டின் மகன் ஆசிர், சகோ. சிராஜின் மகன் பாஷித், சகோ. ஹில்மியின் மகள் ஹப்ஸா, சகோ. மர்ஹூம் நிஸ்தாரின் மகள் அஸ்மா ஆகியோரும் சித்தி பெற்றுள்ளனர்.

                      இம்முறை சித்தி யெய்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், வகுப்பு ஆசிரியைகளான ஜனாபா ஆயிஷா மற்றும் ஜனாபா சிபானி ஆகியோருக்கும் நன்றிகளி தெரிவித்துக்கொள்கிறோம்.