Welcome To Our School Blog Site!

Tuesday, October 2, 2012

எமது வரலாற்று சாதனை




               ரம்புக்கனை ஹுரீமலுவையில் அமைந்துள்ள தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 7 மாணவ மாணவிகள் சித்தி எய்தியுள்ளனர். அத்துடம் மாணவன் முஹம்மத் அஷ்பாக் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 9 இடத்தை பெற்றுள்ளதுடன் பாடசாலையின் 86 வருட வரலாற்றில் புலமை பரிசில் பரீட்சை ஒன்றில் பெற்ற ஆகக் கூடிய புள்ளியுமாகும்.

         இது தவிரவும் பாதிமா யும்னா 171 புள்ளிகளை பெற்றுள்ளார். இவர்களுடன் சகோ. சிராஜின் மகன் இன்ஸாப், சகோ. ரிசாட்டின் மகன் ஆசிர், சகோ. சிராஜின் மகன் பாஷித், சகோ. ஹில்மியின் மகள் ஹப்ஸா, சகோ. மர்ஹூம் நிஸ்தாரின் மகள் அஸ்மா ஆகியோரும் சித்தி பெற்றுள்ளனர்.

                      இம்முறை சித்தி யெய்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை சார்பில் நன்றி தெரிவிப்பதுடன், வகுப்பு ஆசிரியைகளான ஜனாபா ஆயிஷா மற்றும் ஜனாபா சிபானி ஆகியோருக்கும் நன்றிகளி தெரிவித்துக்கொள்கிறோம்.